என் தாயாரின் மறைவு செய்தியைத் தாங்கி, மீளாத் துயரில் நான் தமிழகம் வந்து இரு நாட்கள் ஆகியிருந்தன . மனதில் அம்மாவின் நினைவுகளே மேலெழுந்து நின்றன. அப்பாவின் உறவினர்கள் , ஊர்காரர்கள் என பலர் குழுமி என் அம்மாவின் மரண செய்தியைக் காட்டிலும் முக்கியமான ஒரு செய்தியை விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் நாட்டம் கொள்ளவிடிலும் அச்செய்தி என் செவிப்பறைகளை அறையவே செய்தது.
எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று மற்ற சாதியினரால் அழைக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் இறந்துவிட்டார் எனவும் அவ்வுடலை மற்ற சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே (காரில்) கொண்டு சென்றதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் காலனி தெருவில் சென்று செய்த பிரச்சனையைப் பற்றி மார்தட்டிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவின் காரியம் முடிந்த பிறகு வேறு சில வழிகளில் அவர்களுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு நாளுக்கு நாள் திமிர் அதிகமாகிவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பெருநகரங்களில், நகரங்களில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் பெரிய இடர்பாடுகள் இருப்பதில்லை ஆனால், கிராமங்களில் இந்தப் பிரச்னை இன்னும் தன்னுடைய கோரப்பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு சில வினாடிகள் என் அம்மாவை , அந்த இறந்த முதியவரின் நிலையில் வைத்துப் பார்த்தேன். மனம் கனத்தது. ஒரு வேலை நானும் அந்த சமூகத்தில் பிறந்து என் அம்மாவை பொதுவான பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருந்திருந்தால் என் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் . ஆனால் காலனியில் கலவரம் செய்யச் சென்ற மனிதர்கள் எவரும் அதனை சிந்தித்துப் பார்க்கவில்லை.
இரண்டொரு நாட்கள் கழித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அப்பிரச்சனை என்னவானது என்று கேட்டேன் "எங்க தம்பி, இந்த கம்முனாட்டிங்கல எவனோ விடுதலைச் சிறுத்தைகளில் பொறுப்புல இருக்கானாம் , அவன் நாளைக்கு எதாவது பிரச்னை நடந்தா திருமாவளவனை அழைத்து வருவேன்னு மிரட்டுறான் தம்பி. அதான் விட்டாச்சுன்னு " சொன்னாரு.
எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று மற்ற சாதியினரால் அழைக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் இறந்துவிட்டார் எனவும் அவ்வுடலை மற்ற சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே (காரில்) கொண்டு சென்றதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் காலனி தெருவில் சென்று செய்த பிரச்சனையைப் பற்றி மார்தட்டிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவின் காரியம் முடிந்த பிறகு வேறு சில வழிகளில் அவர்களுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு நாளுக்கு நாள் திமிர் அதிகமாகிவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பெருநகரங்களில், நகரங்களில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் பெரிய இடர்பாடுகள் இருப்பதில்லை ஆனால், கிராமங்களில் இந்தப் பிரச்னை இன்னும் தன்னுடைய கோரப்பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு சில வினாடிகள் என் அம்மாவை , அந்த இறந்த முதியவரின் நிலையில் வைத்துப் பார்த்தேன். மனம் கனத்தது. ஒரு வேலை நானும் அந்த சமூகத்தில் பிறந்து என் அம்மாவை பொதுவான பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருந்திருந்தால் என் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் . ஆனால் காலனியில் கலவரம் செய்யச் சென்ற மனிதர்கள் எவரும் அதனை சிந்தித்துப் பார்க்கவில்லை.
இரண்டொரு நாட்கள் கழித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அப்பிரச்சனை என்னவானது என்று கேட்டேன் "எங்க தம்பி, இந்த கம்முனாட்டிங்கல எவனோ விடுதலைச் சிறுத்தைகளில் பொறுப்புல இருக்கானாம் , அவன் நாளைக்கு எதாவது பிரச்னை நடந்தா திருமாவளவனை அழைத்து வருவேன்னு மிரட்டுறான் தம்பி. அதான் விட்டாச்சுன்னு " சொன்னாரு.
அப்ப யோசிச்சேன், திருமா மாதிரி ஒரு வலிமை மிக்கத் தலைவர் அச்சமூகத்திற்கு வாய்க்காவிடில், அச்சமூகத்தை யார் காப்பாத்தியிருக்க முடியுமென்று.
என்னுடைய மிக நெருங்கிய நண்பர் நான் அண்ணன் திருமாவை ஆதரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்னுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் கேட்டேன், "உங்கள் நண்பர்களில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற ஜாதியில் உள்ள நண்பர்கள் எத்தன பேரு" ன்னு. யாருமில்லைன்னு சொன்னார்.
நம்முடன் பழகும் பலர் தன்னுடைய தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற சாதியை மறைத்தே சொல்கிறார்கள், அவர்கள் படும் வேதனை அப்படி. "இட ஒதுக்கீட்டில் படித்தவன் (இத பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் படிச்சவன் சொல்லுவான் ) " , "உங்களால தான் மெரிட்க்கு வேல்யு இல்லாமப் போச்சுன்னு " எவ்வளவு பேச்சு. இந்த அமிலச் சொற்களுக்காகவே நம் நண்பர்கள் பலர் சாதியைச் சொல்லவதில்லை.
தருமபுரி கலவரம் மட்டுமே நமக்கு மிகப் பெரும் கொடுமையாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்வில் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் கூட படித்த நண்பன் எங்கள் வீட்டில் கிரிக்கெட் பார்க்க வந்தான். அப்போது அவனிடம் எங்க பாட்டி அவன் வூரு என்ன என்று கேட்டது. அவன் ஊரு பேரை சொன்னதும் எங்க பாட்டி "________ யா????” ன்னு ஒரு இழுவ இழுத்துச்சு. ரொம்ப நல்லா போய் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டைக் கூடப் பார்க்காமல் அவன் வீட்டை விட்டு வெளியேறினான். அடுத்த இரண்டாண்டுகள் என்கூடப் படித்தும் என் வீட்டிற்கு ஒரு முறைக் கூட வரவில்லை.
அவர்களின் வேதனையை அவர்களால் மட்டுமே உணர முடியும். அவர்கள் அரசியலை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள் . அவர்களின் அரசியலில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவரோ அவரது இயக்கமோ அம்மக்களை கைவிட்டாலொழிய அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. அண்ணன் திருமா அவர்கள் 2009 இல் கலைஞரோடு இருந்தார், ராஜபக்சே அவர்களுடன் கை கோர்த்தார் என்று உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. காரணங்களைச் சொல்லாதீர்கள். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எனச் சொல்லப் படுபவர்கள் அத் துன்பச் சிறையிலிருந்து மீள்வார்கள் என்று கூறுங்கள், அண்ணன் திருமாவை தலித் பிரச்சனையைத் தூக்கியெரிந்து விட்டு பதவிக்கு வர விருப்பமில்லா முழுநேர ஈழ அரசியல் செய்யச் சொல்வோம்.
பா.ம.க. வின் செயற்பாடுகளுக்கு அண்ணன் திருமா அவர்கள் நடந்து கொண்ட விதமே அவரை பலமடங்கு உயர்த்தி விட்டது. அதில் கூட சிலர் திரு. ராமதாஸ் அவர்களிடம் அண்ணன் திருமா அவர்கள் மலிந்து போவதாக குற்றம் சாட்டினர். திருமா அண்ணன் நினைத்தால் விழியசைவில் ஊரைக் கொளுத்த முடியும், முடியும் தருவாயிலும் அமைதியாக இருப்பதே வீரம். ஹில்லரி கிளின்டனிடம் போனில் பேசுவதல்ல.
அண்ணன் திருமா போன்ற தலித் தலைவர்கள் வலிமையாகவும் , அரசியல் அதிகாரத்துடனும் இருக்கும்வரையில் தான் அம்மக்களுக்குப் பாதுகாப்பு என்பது உறுதி. பாதுகாப்பில் அவர்களை இருத்திக்கொண்டு தான் நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டுமே வொழிய, உன்னுடைய அரசியலை விட்டுவிட்டுவா , நாம் அனைவரும் ஒன்றிணைத்து நமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்பது வெட்டிவேலை. “ நமது போராட்டம்” என்பதில் அவர்களின் போராட்டத்திற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை என்ன ? சாதியடுக்குடன் கூடிய தமிழ்த் தேசியம் அமைந்தால் , அது சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் வாங்கும் செருப்படி இன்று தமிழர்களிடம் இந்திய தேசியம் வாங்கும் செருப்படியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
அண்ணன் திருமா அவர்கள் கலைஞரோடு இருந்தாலும், ஜெயலலிதாவோடு இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் , வலிமையோடு இருக்கவேண்டும். இருந்தால் தான் சில மிருகங்களிடமிருந்து பலரை காக்க இயலும்.
